Breaking News
Friday, October 30, 2015
இணையத்தை கலக்கி வரும் நடிகை கஸ்தூரியின் அரை நிர்வாண படங்கள்
நடிகை கஸ்தூரி தனது அரைநிர்வாண படங்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கஸ்தூரி நிற்பது போல இந்தப் புகைப்படங்கள் உள்ளன.
சென்னையின் மிஸ் மெட்ராஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதன்பின், திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு குழந்தையுடன் கஸ்தூரி டாப்லெஸ் தோற்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள், இப்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்னாள், ’எ பியூட்டிஃபுல் பாடி ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்திற்காகத்தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜேட் பியால் என்பவர் கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பெற்ற பின்னர், பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார். புத்தகமாகவும் வெளியிட இருக்கிறார்.
தாய்மை, முதுமை, எடைக் குறைவு, புற்றுநோய், கருச்சிதைவு மற்றும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விளக்கங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே கஸ்தூரி தனது அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tuesday, October 27, 2015
விஜய் சேதுபதி ஜோடியாக ஹன்சிகா?
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை அடுத்து காமன்மேன் வழங்கும் பி.கணேஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். ஆக்ஷன், காமெடி காதல் கதையான இதில், அவர் ஜோடியாக நடிக்க ஹன்சிகா மற்றும் லட்சுமி மேனனிடம் பேசி வருகின்றனர். ஹன்சிகா உறுதி செய்யப்படுவார் என்று தெரிகிறது. இந்தப் படத்தை ‘ரேனிகுண்டா’ பன்னீர்செல்வம் உதவியாளர் ரத்தின சிவா இயக்குகிறார். இவர் அருண்விஜய், கார்த்திகா நடித்த ‘வா டீல்’ படத்தை இயக்கியவர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். படத்தின் கதை மதுரை, கோவை, கும்பகோணம் பகுதிகளில் நடக்கிறது. ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.
ஓமைகாட்! பத்திரிக்கையாளர்களை பார்த்து நடுவிரலை காட்டிய நடிகை கஜோல்
பாலிவுட் நடிகை கஜோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது நடுவிரலை காட்டியுள்ளார். பாலிவுட் நடிகை கஜோல் ஷாருக்கானுடன் சேர்ந்து தில்வாலே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். காரணம் பாலிவுட் கொண்டாடும் வெற்றி ஜோடியான கஜோலும், ஷாருக்கும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது தான்.
தில்வாலே படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐஸ்லாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. மாசாலா படத்திற்கு பெயர் போன ரோஹித் ஷெட்டி தான் தில்வாலே படத்தை இயக்கியுள்ளார். கஜோல் கடந்த வாரம் மும்பையில் தனது குடும்பத்தாருடன் துர்கா பூஜையை கொண்டாடினார். பூஜையில் கஜோலின் உறவினரும், நடிகையுமான ஷர்பானி முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த கஜோல் ஜாலி மூடில் பேசிக் கொண்டிருந்தார். திடீர் என்று அவர் பத்திரிக்கையாளர்களை நோக்கி தனது நடுவிரலை காண்பித்தார். அவர் நடுவிரலை காண்பித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
வாகா: எல்லை பாதுகாப்பு படை வீரனின் கதை
விக்ரம் பிரபு நடித்து வரும் படம் வாகா. நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். ரன்யாராவ் என்ற புதுமுகம் நடிக்கிறார், இமான் இசை அமைக்கிறார், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். "இது ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரனின் கதை" என்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். அவர் மேலும் கூறியதாவது: வாகா என்றாலே ராணுவம் தான் நினைவுக்கு வரும். இதுவும் ஒரு ராணுவ வீரன் பற்றிய கதை தான். ஆனால் நாட்டுப்பற்று, உயிர்தியாகம்னு பிரச்சார படமாக இல்லாமல் ராணு வீரனுக்கு வரும் எல்லை தாண்டிய காதல் பற்றிய கதை. பொதுவாக ராணுவத்திற்கு போர் வந்தால் தான் வேலை மற்ற நேரங்களில் சும்மாதான் இருப்பார்கள் என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எப்போதும் வேலை உண்டு. அவர்கள் இரவும், பகலும் எல்லையை பாதுகாக்கிறவர்கள். அப்படிப்பட்ட எல்லை காவல் வீரன் விக்ரம் பிரபுக்கு எல்லையில் உள்ள ஒரு பெண்ணின் மீது காதல். அந்த காதலால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. எல்லை பாதுகாப்பு படை ராணுவம் பற்றி நிறைய தகவல்களை சேகரித்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய பல வீரர்களை நேரில் சந்தித்து அவர்களது அனுபவங்களை காட்சியாக்கி இருக்கிறேன். படம் வெளிவந்த பிறகு எல்லை பாதுகாப்பு படையினர் மீது மக்களுக்கு மரியாதை ஏற்பட்டால் அதுதான் படத்தின் வெற்றி, என்கிறார் குமரவேலன்.
Subscribe to:
Posts (Atom)